NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி என்.எஸ்.பி சாலையில் தரைக்கடை வியாபாரிகள் திடீர் போராட்டம்

திருச்சி என்.எஸ்.பி சாலையில் தரைக்கடை வியாபாரிகள் திடீர் போராட்டம்

திருச்சி என்.எஸ்.பி ரோடு உள்ளிட்ட கடைவீதிகளில் செயல்படும் தரைக்கடைகளால் வணிக பெரிய  நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பதாகவும் இதற்கு தீர்வு காணாவிட்டால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர்.


இதனை கண்டித்து நேற்று மாலை 50 க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் என்.எஸ்.பி ரோட்டில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது வியாபாரி ஒருவர் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார் .


உடனே அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி அப்புறப்படுத்தினர்.



பின்னர் தரைக்கடை வியாபாரிகள்  தரையில் அமர்ந்து தரைக் கடை வியாபாரிகளின் வயிற்றில் அடிக்காதே என்றும் வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகி ஒருவரை கைது செய்ய கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.





 இது பற்றி தகவல் அறிந்த கோட்டை போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.

 இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Post a Comment

0 Comments