NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** ஜி ஜோன் அபாகஸ் பயிற்சி மையம் சார்பில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி

ஜி ஜோன் அபாகஸ் பயிற்சி மையம் சார்பில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி

 ஜி ஜோன் அபாகஸ் பயிற்சி மையம் சார்பில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி  திருச்சில் நடைபெற்றது .


இந்த நிகழ்வில் தமிழகம் மட்டும் அல்லாது புதுச்சேரி கர்நாடக ஆந்திரா கேரளா போன்ற பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். மாணவர்கள் ஆர்வமுடன் தங்களது அபாகஸ் திறமையை வெளிப்படுத்தினர்.



10 நிமிடத்தில் 100 கடினமான கணித வினாவிற்கு விடையளித்தனர் இதில் சிறப்பாக செயல் பட்ட மாணவர்கள் அடுத்த சுற்று போட்டிக்கு தகுதிபெற்றனர் இவ்வாறு மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியின் இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு திரைப்பட நடிகர் திருக்குமரன் மற்றும் அபாகஸ் பயிற்சி மையத்தின் நிறுவனர் செல்வமணி ஆகியோர் வெற்றிக்கோப்பைகளை வழங்கினார்.





 இது போன்ற போட்டிகள் மாணவர்களிடம் அபாகஸ் ஆர்வத்தை அதிகப்படுத்தும் என்றும் இன்றைய நவீன உலகில் மொபைல் வீடியோ கேம் என சிறிய உலகத்திற்குள் முடங்கி உள்ள மாணவர்களை அதில் இருந்து மீட்பதற்கு அபாகஸ் ஒரு வரப்பிரசாதம் என்றும் அபாகஸ் பயிற்சி மாணவர்களுக்கு கணிதத்தின் மீது இருக்கும் தேவையற்ற பயத்தை போக்கி படிப்பின் மீது ஆர்வத்தை தூண்டுவதாக அமையும் என்று ஜி ஜோன் அபாகஸ் பயிற்சி மைய நிறுவனர் செல்வமணி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments