NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் அமைதி பேரணி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் அமைதி பேரணி

முன்னாள் பாரத பிரதமரும் பொருளாதார  மேதையும்மான மறைந்த டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர்  கண்ணையன் ராஜா ,மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் ,மார்க்கெட் கோட்ட தலைவர் சம்சுதீன் ,சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பஜார் மைதீன் ,இளைஞர் காங்கிரஸ் சரவணன் சுபசோமு ,வெல்ல மண்டி பாலசுப்பிரமணியன், கள்ளத்தெருகுமார் மார்க்கெட் மாரியப்பன் சிந்தாமணி கணேசன் ஆகியோர் முன்னிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் வளைவில் இருந்து அமைதி ஊர்வலமாக பெரிய கடை வீதி கள்ளத்தெரு சந்துக்கடை மலைக்கோட்டை என் எஸ் பி ரோடு ஆகிய பகுதி வழியாக அமைதி ஊர்வலமாக அன்னாரது திருவருவ படத்தை கையில் ஏந்தி தெப்பக்குளம் காந்தி சிலை அருகில் அமைதி ஊர்வலம் நிறைவு பெற்றது. 


அதன் பிறகு காந்தி சிலை முன்பு இரங்கல் கூட்டம் மாநில பொதுச் செயலாளர்  வழக்கறிஞர் எம் சரவணன் தலைமையில் நடைபெற்றது..

இந்த நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகனாம்பாள் ,வழக்கறிஞர் பிரிவு சுகன்யா விக்னேஷ் ,காங்கிரஸ் நிர்வாகிகள் மல்லியம்பத்து தனசேகர், சோசியல் மீடியா அபுதாகிர்,
மலைக்கோட்டை சேகர்,சொக்கலிங்கம், அண்ணா சிலை விக்டர்,பாதயாத்திரை நடராஜன்,சிங்காரவேல் ,கலைப்பிரிவு ராஜீவ் காந்தி,சண்முகம் ,மேலப்புதூர் சத்யநாதன் ,தர்கா சேக் ,கௌதமன், வாளையூர் பூபாலன் ,ஹரிஷ் ,சிவராஜ், தாகூர்  ,முருகன் ,
தியாகராஜன் ,நிர்மல் குமார் ,காங்கிரஸ் விளையாட்டு பிரிவு தலைவர் ஆனந்த் ,பொறியாளர் பிரிவு நசீர் ,இளைஞர் காங்கிரஸ் ஜிம் விக்கி, உறையூர் விஜி, இர்ஃபான் குளத்தூர் ரகு,ஆழ்வார் தோப்பு அப்சர் ,தென்னூர் பக்ருதீன் ,மலைக்கோட்டை பிரதீப், முஸ்தபா, கோகுல் கிருஷ்ணமூர்த்தி, சந்து கடை தியாகராஜன் ,சிந்தை ஸ்ரீராம் ,பாக்சிங் பாலாஜி, உப்பு பாறை ஜாக்கிசான் ,சிந்தை கௌதம் ,ரியாஸ், முகமது இஷாம் ,அஜய் ,வடிவேல், நித்திஷ் நரேஷ்  ,பீமநகர் அப்பு, ரகுநாத், விஜய் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மௌன  ஊர்வலமாக நடந்து சென்று தங்களது  இரங்கலை செலுத்தினர்.

Post a Comment

0 Comments