NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** ஃபெஞ்சல் புயலால் பாதித்த விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய திருச்சி ஜல்லிக்கட்டு அமைப்பினர்

ஃபெஞ்சல் புயலால் பாதித்த விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய திருச்சி ஜல்லிக்கட்டு அமைப்பினர்

 ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு திருச்சியை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் 500 லிட்டர் பால், 500 சர்க்கரை பாக்கெட்டுகள், 500 பிரட் பாக்கெட்டுகள் மற்றும் 500 பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவை நிவாரண உதவிகளாக வழங்கினர்.


ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டபோது விழுப்புரம் மாவட்ட மக்கள் பாகுபாடின்றி தங்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தற்சமயம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் தங்களால் இயன்ற இந்த உதவியை செய்துள்ளதாக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகத்தினர் தெரிவித்தனர்.









ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் மாநில தலைவர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை விநியோகித்தனர்.

Post a Comment

0 Comments