தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் துவக்க நிகழ்வு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காதி கிராப்ட் அருகே தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் விளக்க உரையாற்றினார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பால்பாண்டி துவக்க உரையாற்றினார்.முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார்.
மாநில நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்துவதால் தனியார் கார்ப்பரேட் கம்பெனிகள் 12349 கிலோமீட்டர் சாலைகள் 210 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி அமைத்து மக்களிடம் சுங்கவரி வசூல் கொள்ளை நடத்தப்படும் அனுமதியோம்!
மாநில நெடுஞ்சாலை ஆணையாத்தால் ஐந்தாயிரம் அரசு பணியிடங்கள் ஒழிக்கப்படும்
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகும், மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் அரசே நிர்வாகித்து பராமரித்திட வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாத 20ஆம் தேதி முதல் அடுத்த மாதம் பிப்ரவரி 28ஆம் தேதி முடிய மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
0 Comments