தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மூன்றாம் கட்ட போராட்டமாக தர்ணா போராட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே இன்று நடைபெற்றது.
இந்த தர்ணா போராட்டம் மாவட்டத் தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிபடி, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை முறையான காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்
நெடுஞ்சாலைத்துறையில் பணியில் நீக்கம் செய்யப்பட்ட சாலை பணியாளர்களின் 11 மாத பணி நீக்க காலத்தை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பனிக்காலமாக முறைப்படுத்தி அமலாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.
0 Comments