NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** நோயாளி வயிற்றில் இருந்த 23 கிலோ புற்றுநோய் கட்டியை அகற்றி திருச்சி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

நோயாளி வயிற்றில் இருந்த 23 கிலோ புற்றுநோய் கட்டியை அகற்றி திருச்சி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

 20 மணி நேரம்  23 கிலோ எடை உள்ள கட்டிகளை வயிற்றிலிருந்து அகற்றிய திருச்சி மருத்துவமனை மருத்துவ குழுவினர் 54 வயதான நபர் வயிற்றிலிருந்த புற்றுநோய் கட்டியை நீக்கிய திருச்சி தில்லைநகரில் உள்ள சில்வர்லைன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மருத்துவக் குழுவினர்.

அறுவை சிகிச்சை தொடர்பாக  மருத்துவர் செந்தில்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்


பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 54 வயதான  சேர்ந்த மின்வாரிய பணியாளர், கடந்த 4 வருடங்களாக வயிற்றில் ஓர் அறியவகை புற்றுநோயால் அவதிபட்டிருந்தார். சென்னை முதல் பல ஊர்களில் மருத்துவம் பார்த்தும் கட்டி அதிகமாகி கொண்டு வயிறு வீக்கம் மற்றும் வயிற்று வலியினாலும் மிகவும் அவதிப்பட்டு கொண்டிருந்தார்.

இந்த நிலையில் எங்களது சில்வர்லைன் மருத்துவமனையில் மருத்துவ குழு முழு பரிசோதனைகளை மேற்கொண்டு மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள தீர்மானித்தோம்.

அதன்படி கிட்டதட்ட 24மணி நேரத்தில் 23கிலோ எடை உள்ள கட்டிகளை வயிற்றிலிருந்து மருத்துவ குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அகற்றியது. இதில் வயிற்றில் கட்டி பரவி உள்ள பகுதிகள் (குடல் வால், குடலின் ஒரு பகுதி மண்ணீரல், பெரிடோனியம் எனப்படும் உள்ளுறை) அனைத்தும் அகற்றப்பட்டு அதிக வெப்பத்தினால் ஆன (HIPEO) எனப்படும் கீமோதெரபி செலுத்தப்பட்டது.அறுவை சிகிச்சை மட்டுமல்லாமல், அதன் பிறகு நீண்ட நாட்கள் செயற்கை சுவாசம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரவில் எங்களின் மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு, இப்பொழுது பூரண குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார் என்ன தெரிவித்தார்.


இதுமட்டுமல்லாது திருச்சி தில்லைநகரில் செயல்படும் சில்வர் லைன் மருத்துவமனையில் முற்றிய நிலையில் உள்ள பலவகையான சவாலான புற்றுநோய்களுக்கும் மருத்துவமனை குழுவினர் அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு நோயாளிகளை குணப்படுத்தி  மகிழ்ச்சியுடன் வாழவைத்து வருகின்றனர்.




பேட்டியின் போது மருத்துவர்கள் சிவபிரகாஷ்,நரேந்திரன், இராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.


Post a Comment

0 Comments