20 மணி நேரம் 23 கிலோ எடை உள்ள கட்டிகளை வயிற்றிலிருந்து அகற்றிய திருச்சி மருத்துவமனை மருத்துவ குழுவினர் 54 வயதான நபர் வயிற்றிலிருந்த புற்றுநோய் கட்டியை நீக்கிய திருச்சி தில்லைநகரில் உள்ள சில்வர்லைன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மருத்துவக் குழுவினர்.
அறுவை சிகிச்சை தொடர்பாக மருத்துவர் செந்தில்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
அதன்படி கிட்டதட்ட 24மணி நேரத்தில் 23கிலோ எடை உள்ள கட்டிகளை வயிற்றிலிருந்து மருத்துவ குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அகற்றியது. இதில் வயிற்றில் கட்டி பரவி உள்ள பகுதிகள் (குடல் வால், குடலின் ஒரு பகுதி மண்ணீரல், பெரிடோனியம் எனப்படும் உள்ளுறை) அனைத்தும் அகற்றப்பட்டு அதிக வெப்பத்தினால் ஆன (HIPEO) எனப்படும் கீமோதெரபி செலுத்தப்பட்டது.அறுவை சிகிச்சை மட்டுமல்லாமல், அதன் பிறகு நீண்ட நாட்கள் செயற்கை சுவாசம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரவில் எங்களின் மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு, இப்பொழுது பூரண குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார் என்ன தெரிவித்தார்.
பேட்டியின் போது மருத்துவர்கள் சிவபிரகாஷ்,நரேந்திரன், இராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments