SDPI கட்சியின் தேசிய தலைவர் ஃபைஸி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்சி பாலக்கரை ரவுண்டானவில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சித்திக் வரவேற்புரை ஆற்றிட மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் நியமத்துல்லா மற்றும் தெற்கு மாவட்ட துணைத் தலைவர்கள் ரஹீம், தளபதி. அப்பாஸ் தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் முபாரக் அலி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இமாம் ஹஸ்ஸான் பைஜி கலந்துக் கொண்டு தேசிய தலைவரை விடுதலை செய்யக்கோரி கண்டன உரையாற்றினார். மேலும் திருச்சி ஜாகீர் கண்டன உரை ஆற்றினார்.
உள்ளிட்ட நிர்வாகிகள் , பொதுமக்களும் கலந்துக் கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.இந்நிகழ்வை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் மஜித் தொகுத்து வழங்கினார்கள்.இறுதியாக மாவட்ட பொருளாளர் பிச்சைக் கனி நன்றி உரையாற்றினார்
0 Comments