NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் "புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க" நிகழ்ச்சி - சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி பங்கேற்பு

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் "புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க" நிகழ்ச்சி - சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி பங்கேற்பு

மே 31 ஆம் தேதி உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது, அந்த வகையில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை நாகமங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா மருத்துவமனையில்  "புகையிலைக்கு எதிராக  ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க" என்ற தலைப்பில் போட்டி நடைபெற்றது , இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி பங்கேற்று சிறந்த படைப்பாளர்களுக்கு விருது வழங்கினார்  தொடர்ந்து அவர் விழா மேடையில் பேசுகையில்..

"இந்த நிகழ்விற்கு என் தாய் கோவிந்தம்மாள் அழைத்தது போலவே நான் உணர்ந்தேன் .சமூகத்தில் நாம் செய்ய வேண்டிய முதல் பணி — புகையிலை எதிர்க்கும் பணியாக இருக்க வேண்டும். மனிதனாக பிறந்த அனைவரும் முதலில் புகையிலையை எதிர்க்க வேண்டும் என்பது அவசியமாகிறது.


இத்தனை திரைப்படங்களை எடுத்துள்ள எனக்கு, 'புகையிலை எதிர்த்து ஏன் ஒரு திரைப்படம் எடுக்கவில்லை?' என்று என் தாயார் கேட்டதுபோல் உணர்ந்தேன்.மறைந்த நடிகர் ராஜேஷ் அவர்கள், நான் எழுதிய ஒரு வசனத்தை திரைப்படத்தில் கூறியிருந்தார். அந்த வசனம்:



'உடம்பில் உண்டாகக்கூடிய வலியை நீக்குபவன் தான் கடவுள். நீங்கள் உண்மையோடு, ஆசைகள் இல்லாமல், நேர்மையாக இந்தத் துறைக்கு வந்திருந்தால், நீங்களும் கடவுளாகலாம்.'அந்த வசனம் எனது எழுத்து. உண்மையிலேயே, வலியை நீக்குபவர்களே கடவுள். அந்த வகையில், மருத்துவர்களே கடவுள்.


புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி அதிகமாக இருக்கும். புற்றுநோயால் இறந்தவர்கள் குறித்து நான் பிராத்தனை செய்வேன் காரணம் — அவர்கள் ஒரு பெரிய வலியில் இருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள் என நம்புகிறேன்.


ஆரம்ப நிலை புற்றுநோயை கண்டறிந்து, அதில் இருந்து மக்களை காக்கும் பணியை செய்பவர்கள் மகத்தான பணி செய்கிறார்கள்.


அந்த வகையில் இந்த புண்ணியப் பணியை செய்து வரும் ஹர்ஷ மித்ரா மருத்துவமனை மற்றும் அதில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!" என பேசினார்

 இந்த நிகழ்வில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் , கல்லூரி உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments