ஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னரில், வருகிற ஜூலை மாதம் 13ஆம்தேதி சமுதாய மாநாடு நடைபெற உள்ளது.
இதனையொட்டி திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர் மற்றும் வெள்ளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செந்தில் பிள்ளை தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டாக்டர்.செந்தில் பிள்ளை கூறுகையில்... அனைத்து உட்பிரிவு வேளாளர்களும் ஒருங்கிணைந்து இந்த மாநாட்டை நடத்த உள்ளதாகவும், 1871 மற்றும் 1931ல் வெள்ளாளர் என்ற ஒரேகுடையின்கீழ் அரசாணை வழங்கப்பட்டதுபோல,
சமுதாய ஒற்றுமைக்கான இந்த மாநாட்டில் ஒரு லட்சம்பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், வேளாளர் சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு அரசியல் ரீதியான ஆதரவு அளிக்கப்படும் என்றும், மக்கள்தொகையை கணக்கில் கொண்டு 20% இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டனர்.
0 Comments