அகில பாரத பார்க்கவகுல சங்கம் சார்பில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ. டி.பன்னீர் செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து அகில பாரத பார்க்கவ குல சங்கத்தின் தலைவர் திருமலை ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.மேலும் திமுக மந்திரி சபையில் பார்க்க உள்ள சமுதாயத்திற்கு எந்த ஒரு பிரதிநிதித்துவமும் வழங்கப்படாத நிலையில், பார்க்கவ குல சமுதாயத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஒருவரையாவது அமைச்சராக நியமிக்கவேண்டும் என திமுக அரசை கேட்டுக்கொண்டனர்.
பார்க்கவ குல சமுதாயத்தை பல உட்பிரிவுகளாக பிரித்து மைனாரிட்டி சமுதாயமாக மாற்றப்பட்டு இருப்பதை தவிர்த்து பார்க்கவகுலம் என்ற பெயரில் அழைத்திடவேண்டும், மேலும் 10 எம்எல்ஏ, இரண்டு அமைச்சர், 2 நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவம் என்ற தேர்தல் நிலைப்பாட்டையும் தெரிவித்துக் கொண்டனர்.
0 Comments