எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு பரப்பிய திமுக ஐடி விங் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட எஸ்.பி, கமிஷனரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்பிக்கள் மனு - திமுக ஐடி விங் வழிநடத்தும் டிஆர்பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுகவினர் புகார் மனு அளித்தனர்
கீழடி அகழாய்வு பணிகள் நிறுத்தம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எந்தவித குரலும் எழுப்பவில்லை, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என திமுக சார்பில் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு பரப்பப்பட்டன.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில், கேலி சித்திரம் பல்வேறு வகையான கார்ட்டூன் புகைப்படங்கள் வெளியிட்ட திமுக ஐடி விங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் திரண்டு வந்தனர். குறிப்பிட்ட நபர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியுமான காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
அதிமுக நிர்வாகிகள், அதிமுக வழக்கறிஞர் பிரிவினர், மகளிர் அணியினர், மாநகர் மாவட்ட பகுதி செயலாளர் உள்ளிட்டோர் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இதேபோல திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி, புறநகர் தெற்கு மாவட்ட தலைவர் முன்னாள் எம்பி ப.குமார் ஆகியோர் தலைமையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்களை நேரில் சந்தித்து திமுக ஐடி விங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடர்ந்து அதனை செயல்படுத்தும் அமைச்சர் டிஆர்பி ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு புகார் மனு அளித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி, மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments