NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் தேர்வு:எல் அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தொழிலதிபர் ஜோசப் லூயிஸ்சிடம் வாழ்த்து பெற்றனர்

இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் தேர்வு:எல் அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தொழிலதிபர் ஜோசப் லூயிஸ்சிடம் வாழ்த்து பெற்றனர்

இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இளைஞர் காங்கிரஸ் திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக ரகுநாதன், துணைத்தலைவராக ரம்யா ரமேஷ்சந்திரன், கோட்டத் தலைவராக வான்மதி(ஜங்சன்), அப்பாஸ்(ஏர்போட்), ஜியாவுதீன்(உறையூர்), காஜாஅசாவுதீன்(பாலக்கரை), நிவேதா(மலைக்கோட்டை) ஆகியோரும், இளைஞர் காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவராக ராகுல்காந்தி  உள்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

வெற்றி பெற்ற நிர்வாகிகள்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகக்குழு உறுப்பினர் ஜோசப்லூயிஸ் தலைமையில் முன்னாள் எம்.பி.அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அத்துடன் தொழிலதிபர் ஜோசப்லூயிஸ்சிடம் வாழ்த்து பெற்றனர். 


இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் ஜவகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கள்ளிக்குடி சுந்தரம், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ், பாராளுமன்ற முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல்லூர் சுரேஷ், மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், சிக்கல் சண்முகம்,மாவட்டச் செயலாளர் வக்கீல் அல்லூர் பிரபு, 

இளைஞர் காங்கிரஸ் அல்லூர் பிரேம், இளைஞர் காங்கிரஸ் ரமேஷ் சந்திரன், பீமநகர் காசிம், வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜெயபிரகாஷ்,நிர்வாகிகள் கருணாகரன், மெய்ய நாதன், சந்துரு,உறையூர் எத்திராஜ், ஓவியர் கஸ்பார்,திருவரங்கம் சேட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments