திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 23-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவானது எம்.ஐ.இ.டி. கல்லூரி வளாகத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் Er. A. முகமது யூனுஸ் அவர்கள் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார்.
எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் முனைவர் M.Y. அப்துல் ஜலீல் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.பட்டமளிப்பு விழாவிற்கு வருகைதந்த மாணவர்கள், பெற்றோர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. நவீன் சேட் அவர்கள் வரவேற்று கல்லூரி கடந்துவந்த பாதை, அதன் வளர்ச்சி மற்றும் சாதனைகளை தன்னுடைய பட்டமளிப்பு விழா அறிக்கையில் எடுத்துக் கூறினார்.
இந்த போட்டி நிறைந்த உலகில் மாணவர்கள் கற்றுக் கொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் வருவது. மேலும் மாணவர்கள் சாதிக்க தங்களுடைய அறிவை தினமும் வளர்த்துக் கொள்ள வேண்டும், மற்றும் மாணவர்கள் அதிக கல்வி தகுதிகளை தேடிச் செல்ல வேண்டும் என்றார். மேலும் நாட்டை வளப்படுத்த மாணவர்கள் தங்களின் கல்வி தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தன் உரையில் கூறினார்.மேலும் இந்த வருடத்திற்கான நீதிபதி M. பக்கீர் முகமது சுழல் கோப்பையானது பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்த மேலாண்மைத்துறைக்கு வழங்கப்பட்டது. E. சந்தோஷ்குமார் கட்டிடவியல் துறை உதவிப் பேராசிரியர் சிறப்புவிருந்தினர் அவர்களை அறிமுகப்படுத்தினார் .நிறைவாக மேலாண்மைத்துறை துறைத்தலைவர் முனைவர் A. ஆண்டனி பிரகாஷ் அவர்கள் நன்றி உரையாற்றினார். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாவின் ஒருங்கிணைப்பாளரான அறிவியல் மற்றும் மனிதநேயத் துறையின் துறைத்தலைவர் R. மணிகண்டன் அவர்கள் மிகசிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
0 Comments