// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** விதிமுறைகள் மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -மாவட்ட ஆட்சியரகத்தில் மனு

விதிமுறைகள் மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -மாவட்ட ஆட்சியரகத்தில் மனு

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இன்று சாமானிய மக்கள் நல கட்சி திருச்சி மாவட்ட பொருளாளர் ஜோசப் தலைமையில் மனு அளித்தார்.



அதில், நத்தம்பாடி பட்டி கீழக்குறிச்சி கிராமத்தில் உள்ள பாட்டியின் ஐந்து அந்தோனியார் புறம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற கட்டிடங்கள் அதன் எல்லையை மீறி கட்டிட விதிகளையும் மீறி பொது சாலையையும் சேர்த்து ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்படுகின்றனர் .



ஏற்கனவே மிகவும் குறுகிய தேசிய நெடுச்சாலையாக இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவே அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் பயன்படும் வகையில் செய்து தரும்படி கேட்டுக் கொண்டார்.



இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சரவணன் இடம் மனு அளித்தனர்

Post a Comment

0 Comments