தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சார்பில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் காண தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மாநிலத் தலைவர் முகமது ஹனிபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.
ஒழுக்கத்தில் , நீதியில், சம சீரான வளர்ச்சியில், சுகாதாரத்தில் சிறந்த தமிழ்நாடு விளங்க புதிதாக பொறுப்பேற்கும் அரசு விளங்க வேண்டும். மேலும் ஊழல், மது போதை இல்லாத அரசாக இருக்க வேண்டும்.
மின் கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்கின்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும் ஏழை எளிய நடுத்தர மக்களின் மீதான கட்டண சுமைகளை குறைக்க வேண்டும் ஊழலை ஒழிப்பதற்காக. கொண்டு வரப்பட்ட லோக் ஆயுத்தா அமைப்பின் செயல்பாடுகளை முடக்கி விட வேண்டும்.
ஊழல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக சிங்கப்பூரை போன்ற சுதந்திர மான நிறுவனம் அமைக்க வேண்டும்.தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மத்திய அரசு நீர்த்துப் போக செய்து விட்ட நிலையில் அதற்கு மாற்றாக தமிழ்நாடு அரசு தக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.








0 Comments