நாட்டின் முன்னணி தேர்வுப் பயிற்சி நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL), நீட் (NEET UG) 2026 தேர்வில் திருச்சியில் உள்ள தனது மாணவர்கள் நிகழ்த்தியுள்ள சிறப்பான சாதனையை பெருமையுடன் அறிவித்துள்ளது. இதில் திருச்சியைச் சேர்ந்த மாணவி யாழினி மணிவண்ணன், அகில இந்திய தரவரிசையில் (AIR) 777-வது இடத்தைப் பிடித்து திருச்சி நகர அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து, கௌதம் வெங்கடேஷ் அகில இந்திய தரவரிசையில் 1097-வது இடத்தையும், தக்ஷின் நாகராஜ் எஸ்.ஏ. 1678-வது இடத்தையும் பிடித்து சிறப்பான சாதனை படைத்துள்ளனர்.
இந்த ஆண்டு தேசிய அளவில் ஆகாஷ் மாணவர்கள் அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் 4 மாணவர்களும், முதல் 50 இடங்களுக்குள் 18 மாணவர்களும், முதல் 100 இடங்களுக்குள் 41 மாணவர்களும் இடம்பிடித்து, நீட் போன்ற கடினமான போட்டித் தேர்வுகளில் இந்தியாவின் மிகவும் நம்பகமான கல்வி நிறுவனமாக AESL மீண்டும் தனது முன்னணி இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வெற்றி குறித்து ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் துணை மண்டல இயக்குநர் டி. சிவா பிரசாத் கூறுகையில், மாணவர்களின் இந்தச் சாதனை ஒட்டுமொத்த ஆகாஷ் குடும்பத்திற்கும் பெருமையான தருணம் என்றும், அவர்களின் ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகியவை தேர்வுத் தயாரிப்பில் அவர்களை தனித்துவமாக வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த மருத்துவர்களாக உருவெடுக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.



0 Comments