யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயற்குழு..முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்
திருச்சி இனாம்குளத்தூரில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
(1) திருச்சி மாநகர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் சுற்றித்திரியும் வெறிநாய்களை மாநகராட்சி நிர்வாகம் உடனே பிடிக்க வேண்டும்.
(2) மதுரை மேலூர் வாக்குசாவடி வாக்களிக்க வந்த முஸ்லீம் பெண்ணிடம் ஹிஜாப் அகற்ற சொன்ன பா.ஜ.க நிர்வாகியை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது..தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
(3) பக்ரீத் பண்டிகைக்கு பிறகு குடும்ப இஸ்திமா நடைபெற திட்டமிடப்படுட்ள்ளது.
(4) திருச்சி மணப்பாறை நகர தலைவராக சாகுல்ஹமீது நியனம்
இந்த கூட்டத்தின் முடிவில் இனாம்குளத்தூர் கிளை புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். யூசூஃப் தலைவராக, நசுருதீன் செயலாளராக, அசாருதீன் பொருளாளராக, ஷாஜகான் துணை தலைவராக, முபாரக் துணை செயலாளராக ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
0 Comments