// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி திருவெறும்பூரில் கடைக்குள் புகுந்த 8 அடி நீள சாரை பாம்பு

திருச்சி திருவெறும்பூரில் கடைக்குள் புகுந்த 8 அடி நீள சாரை பாம்பு

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு 100 அடி சாலை பகுதியை சேர்ந்தவர் ஜாகித் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார்.

இந்நிலையில் ஜாகித் இன்று காலை வழக்கம்போல் கடையை திறந்துள்ளார் அப்போது கடைக்குள்  சுமார் 8 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு இருந்துள்ளது.

இதனை பார்த்து பயந்து போன ஜாகித் உடனடியாக நவல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் நவல்பட்டு தீயணைப்பு வீரர் மோகன் குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்ப துறையினர் சாரைப் பாம்பை பிடித்து சாக்குப் பைக்குள் அடைத்து வனப்பகுதியில் கொண்டு போய்விட்டனர்..கடைக்குள் பாம்பு புகுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Post a Comment

0 Comments