// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு


திருச்சி மாநகராட்சி  உறுப்பினர்கள் பதவியேற்பு விழா - மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான் முன்னிலையில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றுக் கொண்டனர்.
















நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா மாநகராட்சி  ஏ.எஸ்.ஜி. லூர்துசாமி பிள்ளை கூட்ட அரங்கில் இன்று காலை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான் வெற்றி பெற்ற 65 வார்டு உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 



மொத்தம் 65 வார்டுகளில் திமுக உறுப்பினர்கள் 49, காங்கிரஸ் உறுப்பினர்கள் 5, அதிமுக உறுப்பினர்கள் 3, மதிமுக உறுப்பினர்கள் 2, விசிக உறுப்பினர்கள் 2, கம்யூனிஸ்ட் உறுப்பினர் 1, சுயேச்சை உறுப்பினர்கள் 2 ஆகியோர்  உறுதிமொழி வாசித்து பதவியேற்றுக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, மேயர், துணை மேயர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Post a Comment

0 Comments