மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கில், விசாரணை நடத்த நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ல் இடைக்கால தடை விதித்திருந்தது. அதையடுத்து தற்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இந்த வழக்கில் நேற்று விசாரணையை மீண்டும் தொடங்கியது. அதில் முதற்கட்டடமாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்போலோ மருத்துவர்களிடத்தில் நேற்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக எய்ம்ஸ் மருத்துவர்களிடத்தில் விசாரணை நடைபெற்றது.
முக்கியமாக வரும் 21-ம் தேதி ஓபிஎஸ் விசாரணையில் ஆஜராக வேண்டுமென்று ஓபிஎஸ்-க்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் சசிகலாவின் அண்ணண் மனைவி இளவரசிக்கும், வரும் 21-ம் தேதி ஆஜராக வேண்டும் என விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
0 Comments