BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** ஆடுகள் விற்ற பணத்தை கேட்டவருக்கு கத்தி குத்து...!

ஆடுகள் விற்ற பணத்தை கேட்டவருக்கு கத்தி குத்து...!

 திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் ஆடுகள் விற்ற பணத்தை கேட்டவருக்கு வயிற்றில் கத்திகுத்து ரத்தவெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதி கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி ரோடு அசோக் நகர் மேட்டு தெருவை சேர்ந்தவர் முஸ்தபா இவரது மகன் அசாருதீன் வயது (35) இவர் பி.இ எலக்ட்ரிக்கல் முடித்துவிட்டு பெரம்பலூரில் ஆடுகள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மேல கல்கண்டார் கோட்டை பனக்கால் தெருவை சேர்ந்த அபிபுல்லா மகன் சித்திக் என்பவர் அசாருதினிடம் ஆடுகள் வாங்கியுள்ளார். இதனால் அசாருதீனுக்கு சித்திக் ரூபாய் 2 லட்சம் பணம் தர வேண்டும். 

இது சம்பந்தமாக நேற்று முன்தினம்  இரவு அசாருதீனும் இவரது பெரியப்பா மகன் முகமது சலீமும்(33) மேல கல்கண்டார் கோட்டை பனக்கால் தெருவில் வந்து சித்திக் இடம் பணத்தைக் கேட்டபொழுது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சித்திக் தம்பி ராஜாமுகமது (24) என்பவர் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டி எங்கிருந்து வந்து எங்களிடம் பணம் கேட்கிறாய் என்று இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இத்தோடு ஒழிந்து போடா என்று சொல்லி அசாருதீனின் இடதுபக்க வயிற்றில் குத்தியுள்ளார். 


ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அசாருதீன் பெரியப்பா மகன் முகமது சலீம் அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Post a Comment

0 Comments