திருச்சி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க திருச்சி மாவட்ட எஸ்.பி இரவில் சைக்கிளில் சென்று ஆய்வு
குற்ற சம்பவங்களை குறைக்க வேண்டியும், சாலை விபத்துகளை தடுக்க வேண்டியும் திருச்சி மாவட்ட புறநகர் பகுதியான ராம்ஜிநகர், இனாம்குளத்தூர் , அம்மா பேட்டை , ஆலம்பட்டிபுதூர் , மணப்பாறை ஆகிய பகுதிகளில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் சைக்கிளில் சென்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்... இரவு 10.30 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை 100 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டு இரவு நேர பணியில் இருக்கும் காவலர்களுக்கு பல்வேறு இடங்களில் அறிவுரை வழங்கினார்.
0 Comments