BREAKING NEWS *** டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் *** திருச்சியில் டாட்டா ஏசி வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே 3- பெண்கள் பலி.

திருச்சியில் டாட்டா ஏசி வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே 3- பெண்கள் பலி.

திருச்சி மாவட்டம் கல்லணை அருகே பனையபுரத்தில் டாட்டா ஏசி வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவம் இடம் வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்....


முதற்கட்ட விசாரணையில் கும்பகோணம் பகுதியில் இருந்து விராலிமலை அருகே செல்லம்பட்டி பகுதியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக திருச்சி கல்லணை பனையபுரம் அருகே 8-பேர் டாட்டா ஏசி வாகனத்தின் மூலம் வந்து கொண்டிருந்த பொழுது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது மேலும் இந்த கோர விபத்தை கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடி லாரி டிரைவர் மற்றும் டாட்டா ஏசி வாகனத்தில் வந்தவர்களை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்...

 இந்த விபத்தில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் இறந்த மூன்று பெண்களின் உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர்.‌ மேலும் விபத்துக்குள்ளான லாரி சாலையின் அருகே 30 அடி  உள்ள காட்டு வாய்க்கால் விழுந்து நொறுங்கியது. மேலும் போலீசார் இறந்த பெண்களின் பெயர் மற்றும் முகவரி கொடுத்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments