திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில்ஸ்டீபன் ஸ்மித்தின் நாட்குறிப்பிலிருந்து புத்தகம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர் நாசர் தலைமை வகித்தார்.
இந்நூலின் மிகப் பெரிய சிறப்பு, இதற்கு முன்பு பொதுமக்களின் பார்வைக்கு வராத பல அரிய புகைப்படங்கள், கையால் வரையப்பட்ட ஓவியங்கள், ராக்கெட் வடிவமைப்பு வரைபடங்கள், சோதனை நிகழ்வுகளின் பதிவுகள் மற்றும் ஆவணங்களை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியிருப்பதாகும். இதனால், ராக்கெட் அஞ்சல் வரலாற்றை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் மற்றும் விண்வெளி வரலாற்று ஆர்வலர்களுக்கு இந்நூல் மதிப்புமிக்க ஆதாரமாக விளங்குகிறது.
இந்திய அஞ்சல் வரலாற்றில் ராக்கெட் அஞ்சல் என்பது ஒரு புதுமையான அத்தியாயமாகும். அந்த அத்தியாயத்தின் உண்மை நிகழ்வுகளை நேரடியாகப் பதிவு செய்த ஸ்டீபன் ஸ்மித்தின் நாட்குறிப்புகளை தொகுத்து வெளியிட்டிருப்பதால், இந்நூல் ஒரு சாதாரண வெளியீடாக இல்லாமல் முதன்மை வரலாற்று ஆவணமாக மதிக்கப்படுகிறது.
இன்று ராக்கெட் அஞ்சல் தொடர்பான பல ஆய்வுகள், கட்டுரைகள் மற்றும் கண்காட்சிகளில் மேற்கோளாகப் பயன்படுத்தப்படும் இந்நூல், இந்தியாவின் அஞ்சல் மற்றும் வானூர்தி வரலாற்றை அறிய விரும்புவோருக்கு இன்றியமையாத குறிப்புநூலாக திகழ்கிறது. குறிப்பாக பிளாட்டலி (Philately), ஏரோபிளாட்டலி (Aerophilately), ராக்கெட் அஞ்சல் வரலாறு மற்றும் அறிவியல் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு அவசியமான புத்தகமாகும்.
"From the Diary of Stephen Smith" என்ற இந்த வெளியீடு, இந்திய ராக்கெட் அஞ்சல் வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ஆவண நூலாகவும், அஞ்சல்தலை ஆய்வுலகில் முக்கிய வெளியீடாகவும் போற்றப்படுகிறது என்றார்.


0 Comments