// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** மியாவாக்கி காடு உருவாக்கும் திட்டம்

மியாவாக்கி காடு உருவாக்கும் திட்டம்

 திருச்சியில் மியாவாக்கி காடு உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது....தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்  கே .என். நேரு அவர்கள் வழிகாட்டுதலின்படி  திருச்சிராப்பள்ளி  மாநகராட்சி சார்பில் மியாவாகி  முறையில் அடர்வன காடு உருவாக்கும் திட்டம் குழுமணி ரோடு, வார்டு எண். 8. கோவிந்தசாமி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 17,460  சதுர அடியில்  மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள்  நிழல் தரும் மரச்செடிகளை நட்டுவைத்து இன்று தொடங்கி வைத்தார்....

மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், துணை மேயர் திவ்யா, செயற்பொறியாளர் சிவபாதம் உதவி ஆணையர் செல்வ பாலாஜி ,மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் , அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments