BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சி அருகே விபத்தில் மரணமடைந்தவரை பார்க்க வந்த பெண் அதிர்ச்சியில் உயிரிழப்பு

திருச்சி அருகே விபத்தில் மரணமடைந்தவரை பார்க்க வந்த பெண் அதிர்ச்சியில் உயிரிழப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே பனையபுரம் பகுதியில் கும்பகோணத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த லோடு ஆட்டோ மீது மணல் லாரி மோதியது.இதில் கும்பகோணம் அண்ணாநகர்  சேர்ந்த சத்யானந்தம் மனைவி சூர்யா (33) கணேசன் மனைவி லட்சுமி (53) ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர்..

சத்யானந்தம் திருச்சி அரசு மருத்துவமனயில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்... இந்த நிலையில் உயிரிழந்த சூர்யா படுகாயமடைந்த சத்யானந்தத்தை பார்க்க சூர்யாவின் தம்பி திருச்சி மருங்காபுரி அருகே தொட்டியப்பட்டியை சேர்ந்த ரஞ்சித் அவரது மனைவி கிருத்திகா (21) ஆகியோர் நேற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது சூர்யா உடலை பார்த்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்த கிருத்திகா உயிரிழந்தார். இறக்கும் போது கிருத்திகா 9 மாதம் நிறைமாத கர்ப்பிணி பெண் என குறிப்படத்தக்கது...

Post a Comment

0 Comments