தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகிறார்... தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (30-05-2022) பிற்பகல் 12.30 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். திருச்சி TVS டோல்கேட் சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுக்கும் அவர் மதிய உணவுக்கு காரில் சாலை மார்க்கமாக வேளாங்கண்ணி செல்கிறார்.
வேளாங்கண்ணியில் நாளை தங்கம் முதல்மைச்சர் நாளை மறுநாள் 31 ஆம் தேதி நாகை,திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்கிறார். இதை தொடர்ந்து செவ்வாய் கிழமை மாலை 6 மணிக்கு திருச்சி விமானம் வந்தடைந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
0 Comments