BREAKING NEWS *** டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் *** கத்தியை காட்டி பணம், செல்போன் பறித்து சென்ற நபர் குண்டர் சட்டத்தில் கைது

கத்தியை காட்டி பணம், செல்போன் பறித்து சென்ற நபர் குண்டர் சட்டத்தில் கைது

கடந்த 10.05.22-ந்தேதி கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட டி.வி.எஸ் டோல்கேட் சர்வீஸ் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2000- பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து. வழக்கின் சம்மந்தப்பட்ட எதிரி தாஜிதின்  என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலும் விசாரணையில் எதிரி தாஜிதின் மீது திண்டுக்கல் மாவட்டத்தில் கடைக்கு சென்ற நபரை வழிமறித்து ஜாதி பெயர் சொல்லி திட்டி இரும்பு கம்பியால் தாக்கிய வழக்குகள் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, எதிரி தாஜிதின் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பவர் எனவும், குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் என விசாரணையில் தெரிய வருவதாலும், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கே.கே.நகர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், . அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்

Post a Comment

0 Comments