திருச்சி சுப்பிரமணியபுரம் 47 வது வார்டு எம்ஜிஆர் சிலை அருகே உள்ள பகுதியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் தெருக்களில் கடந்த 10 நாட்களாக வழிந்து ஓடுகிறது.. பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை ..
இதன் அருகில் பிரிட்டோ பள்ளி மற்றும் ஆதிமூலம் பள்ளிகள் செயல்படுகின்றன... இந்த பள்ளியில் சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான படிக்கின்றனர்..
இந்த சாக்கடையில் ஏற்படும் துர்நாற்றம் மூலம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது... மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடை பிரச்சனையை சரி செய்ய சுப்ரமணியபுரம் பகுதி பொது மக்கள் கோரிக்கையாகவுள்ளது.
நிருபர் மகேஷ்
0 Comments