BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சி அன்பில் அரசு பள்ளியில் ஆசிரியரை நியமிக்க மாணவர்கள் ரூ.500 தர வேண்டும்..! திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மாணவ, மாணவிகள் புகார்

திருச்சி அன்பில் அரசு பள்ளியில் ஆசிரியரை நியமிக்க மாணவர்கள் ரூ.500 தர வேண்டும்..! திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மாணவ, மாணவிகள் புகார்

 பாடங்களை நடத்த ஆசிரியரை நியமிக்க ஒவ்வொரு மாணவரும் 500 தர வேண்டும் - தலைமை ஆசிரியை  கேட்டதால் மாணவ மாணவிகள் அதர்ச்சி -  திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் மாணவ மாணவிகள் முறையீடு.


திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள கீழ்அன்பில் ஆதி திராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வந்தனர். இப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதி இல்லாததால் தற்போது பள்ளியில் சுமார் 200 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று  வருகின்றனர்.


இந்நிலையில் அப்பள்ளியை சேர்ந்த இருபதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாணவர் அஜய்பாலன்  

எங்களது பள்ளியில் தற்பொழுது பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு பாடம் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் இல்லை. தலைமை ஆசிரியையிடம் கேட்டால் அவர்கள் ஒவ்வொரு மாணவரும் ரூபாய் 500 தந்தால் மட்டுமே ஆசிரியரை நியமிக்க முடியும் என தெரிவித்து விட்டனர். இது தொடர்பாக எங்களது பெற்றோர்களும் சென்று கேட்ட பொழுது அவர்களுக்கு மரியாதையும் கொடுக்காமல் சரியான பதில் கொடுக்கவில்லை. மேலும், பள்ளியில் குடிநீர் மற்றும் 

எந்த அடிப்படை வசதியும் இல்லை. இத்தொடர்பாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியில் சந்தித்து இது  தொடர்பாக மனு அளித்துள்ளோம்.


எனவே உடனடியாக ஆட்சியர் எங்களது எதிர்காலத்தையும், படிப்பை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை  எடுத்து பாடங்களை கற்பிக்க உரிய  ஆசிரியர்களை  நியமிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இது போல் நம்மிடம் பேசிய மாணவி ஆர்த்தி மாணவிகளுக்கு எந்த அடிப்படையில் இல்லாததால் இயற்கை உபாதை கூட கழிக்க முடியாமல் அவதிப்படுகிறோம். இது தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


இந்த  அன்பில் பகுதி என்பது தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவருக்கும் மிகவும் நெருக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments