BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** ஜோய் ஆலுக்காஸ் பவுண்டேஷன் சார்பாக ஊக்கத்தொகை மட்டும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஜோய் ஆலுக்காஸ் பவுண்டேஷன் சார்பாக ஊக்கத்தொகை மட்டும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

திருச்சி  சத்திரம் பேருந்து நிலையம் கல்லூரி சாலையில் உள்ள ஜோய் ஆலுக்காஸில் அரசு பள்ளியில் பயின்ற 10ம் வகுப்பு மற்றும் 12.ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கவிக்கும் விதமாக ஜோய் ஆலுக்காஸ் பவுண்டேஷன் சார்பாகஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,



இதில்ஜோய் ஆலுக்காஸின் மேலாளர்கள் பிரிஜூ ஜோசப், நிஷித்லால்  ஆகியோர் தலைமை வகித்தனர்.


சிஆர்ஓ. ஜோஸ் ரப்பால்,  விற்பனை மேலாளர் விஜய்சன்ச்ஜய், மற்றும் சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்


சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிப் குமார் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தன்னம்பிக்கை உரையாற்றி ஊக்க தொகை மற்றும் பாரட்டு சான்றிதழ் வழங்கி சிறபித்தார்


மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் பாரதி விவேகானந்தர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சர்க்குனம் ஆகியோர் கலந்துகொண்டனர் மேலும்  பாட்டு போட்டி ஒவிய போட்டி பேச்சு போட்டி கட்டுரை போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 150க்கும் மேற்ப்பட்ட அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஜோய் ஆலுக்காஸ் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட கலந்து கொண்டு நிகழ்சியை சிறபித்தனர்,

Post a Comment

0 Comments