BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** வரி பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம்

வரி பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம்

 ஜிஎஸ்டி பிரச்சனைகளுக்கு தீா்வு காணாவிட்டால், நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய வணிகா் சம்மேளனத்தின் (சிஏஐடி) பொதுச்செயலாளா் பிரவீன் கண்டேல்வால் அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை (நேற்று)  நடைபெற்றது. மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பிரவீன் கண்டேல்வால் செய்தியாளா்களிடம் பேசுகையில், "பிராண்ட் அல்லாத பாக்கெட் செய்து சீலிடப்பட்ட அரிசி, கோதுமை, தயிா், மாவு போன்ற பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. கிரைண்டருக்கு 18 சதவீதமாக வரி உயா்ந்துள்ளது. 40 வேளாண் விளை பொருட்களுக்கு செஸ் வரி விதிப்பால் சிறு வணிகா்கள், விவசாயிகள், அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். மோட்டாா் பம்ப் செட்டுகள், வேளாண் உபகரணங்கள் விலை அதிகரிக்கும். இதனால், தொழில்முனைவோா் பெரும் சிரமத்துக்கு உள்ளாக நேரிடும்..


செஸ்வரி தொடா்பான பிரச்சனைகளுக்கு தமிழக முதல்வரையும், ஜிஎஸ்டி தொடா்பான பிரச்சனைகளுக்கு மத்திய நிதி அமைச்சரையும் நேரில் சந்தித்து முறையிட தீா்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு உரிய தீா்வு எட்டப்படாவிட்டால், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் செயற்குழு கூட்டப்பட்டு, தமிழகம் தழுவிய ஆா்ப்பாட்ட அறிவிப்பு வெளியிடப்படும். அதேபோன்று ஜிஎஸ்டி பிரச்சனைகளுக்குத் தீா்வு காணப்படாவிட்டால் நாடு தழுவிய அளவில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும்". இவ்வாறு அவர் தெரிவித்தார்

Post a Comment

0 Comments