NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** நில வணிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நில வணிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நில வணிகர்கள் நல சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி பாலக்கரையில் ஏ.பி.ஆர்.ரியல் எஸ்டேட்டில் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அப்துல் நாசர் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் கருமாரி கருணாகரன் முன்னிலை வகித்தார்.


இளைஞரணி மாநில செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் பால்பாண்டியன்,மாநில பொருளாளர் எஸ். ஏ.ரஹீம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நிர்வாகிகள் மகாதேவன், எம்.பி. ராஜா,ரியாஸ் அகமது, மாநகர் மாவட்ட செயலாளர் யாசின்,ஆரிப்,ஏ.பி.ஆர் ரியல் எஸ்டேட் கதிர்ராசா, அன்சாரி, இலாஹி, பயாஸ், ரியாஸ், சுப்ரீம் ரமேஷ், வெங்கடேசன்,கடலூர் அப்துல் கசன் ,காதர், பால யோகா, உள்பட ஏராளமானநிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில்  புறநகர் மாவட்ட தலைவர் குண்டூர் கணேசன் நன்றி கூறினார்.கூட்டத்தில் நில வணிக தரகர்களுக்கு பிடிக்கப்படும் 15 சதவீத ஜி.எஸ்.டி வரியை ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும்.அனைத்து உறுப்பினர்களுக்கும் இலவசமாக காப்பீட்டு வசதி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Post a Comment

0 Comments