NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி யானைகள் மறுவாழ்வு முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த யானை உயிரிழப்பு

திருச்சி யானைகள் மறுவாழ்வு முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த யானை உயிரிழப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தனியார் வசம் இருந்த யானைகள், சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த யானைகளை மீட்டு அவற்றை பராமரிப்பதற்காக திருச்சி எம்.ஆர் பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.


இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் மீட்கப்படும் யானைகளை வைத்து பராமரித்து வருகின்றனர்.

எம்.ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரித்து வந்த 26 வயதுடைய யானை ரோகினி இன்று காலை உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது.

சுவாச கோளாறு,கல்லீரல்,கிட்னி பிரச்சினை ரோஹினிக்கு இருந்து வந்த நிலையில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர் ஆனால் சிகிச்சை பலன் என்று இன்று காலை யானை உயிரிழந்தது.

Post a Comment

0 Comments