NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** மூப்பனார் 21 ஆம் ஆண்டு நினைவுநாள்...! தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மலரஞ்சலி

மூப்பனார் 21 ஆம் ஆண்டு நினைவுநாள்...! தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மலரஞ்சலி

 திருச்சி மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக இன்று  G K மூப்பனார் அவர்களின்  21 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு திருச்சி பாலக்கரை பகுதி சகாய மாதா மக்கள் மன்றம் எதிரே  அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர்  இன்டர்நெட் ரவி அவர்கள் தலைமை தாங்கினார். மூத்த மாவட்ட துணை தலைவர் என் ரங்கராஜ் Ex.M.C . திருச்சி மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர்  தனசேகர் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ரகு  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில  பொதுக்குழு உறுப்பினர் S. ராஜு, 



திருச்சி மருத்துவர் அணி தலைவி டாக்டர். லட்சுமி நந்தகுமார் , இளைஞர் அணி மாநிலச் செயலாளர்  சிவகணேசன்


மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது உசேன்,  மாவட்ட பொதுச் செயலாளர்கள்  M.ரவிச்சந்திரன்,  N.சரவணன்,  சிவசக்தி N.வெங்கடேசன், G S குட்டி மணி, மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் குருமணிகண்டன். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், சிறுபான்மை பிரிவு அனீஷ், வார்டு தலைவர்கள் மரக்கடை M. காசிம் , செந்தண்ணீர்புரம் C.சுப்ரமணியன்

,  

தாராநல்லூர் வடிவேலு , தாராநல்லூர் சோமு ஆசாரி,  எடத்தெரு முருகேசன் , இளைஞர் அணி மாவட்ட பொது செயலாளர்கள் மாலிக், கமல் , திருவெறும்பூர் நகர தலைவர் சக்திவேல், தெற்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் ராம் சுந்தர், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் பாலக்கரை கோட்டத் தலைவர்  R.கண்ணன் நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாலக்கரை கோட்டை துணை தலைவர் D J ஹரி,  அரவை ஆலை அதிபர் சுந்தரம் ஆகியோர் முன்னின்று  செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments