பரந்தூரில் புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை சந்திக்க சென்ற எஸ்.டி.பி.ஜ நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து திருச்சியில் சாலை மறியல் 50-க்கும் மேற்பட்டோர் கைது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதார விளைநிலங்களையும் பறித்து விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிராக போராடும் மக்களை சந்திக்கச் சென்ற SDPI கட்சி மாநில செயலாளர் கரீம், வர்த்தகர் அணி மாநில தலைவர் அன்சாரி உட்பட நிர்வாகிகள் மீதான காவல்துறை அராஜக கைதை கண்டித்து திருச்சி பாலக்கரையில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமையில் மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
0 Comments