BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி 36 வது வார்டு பகுதியில் மின்விளக்கு இல்லை பொதுமக்கள் புகார்

திருச்சி 36 வது வார்டு பகுதியில் மின்விளக்கு இல்லை பொதுமக்கள் புகார்

திருச்சி சங்கிலியாண்டபுரம் 36 வது வார்டு பகுதியில் காசியா பிள்ளை காலனி பகுதி உள்ளது.. இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தெருவிளக்கு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.. இந்த பகுதி திருச்சி மாநகராட்சி சங்கிலியாண்டயுரம் பகுதியாகவும்.. 


இந்த பகுதியில் மின்விளக்கு இல்லாத காரணத்தால் இரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகள் தனியாக நடந்து செல்ல அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் திமுக 36 வது வார்டு கவுன்சிலர் மண்டி சேகர் அவர்களிடம் புகார் தெரிவித்தனர்.


அதற்கு கவுன்சிலர் மின்சார வாரியத்திடம் புகார் கொடுங்கள் என்று அலட்சியமாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அதிகாரிகள் பொதுமக்கள் நீங்கதான் செலவு செய்து மின்விளக்கு போட வேண்டும் மாநகராட்சியில் போதிய நிதி இல்லை என்று அலட்சியமாக பதில் பேசி உள்ளனர்.. இந்த மின் விளக்கு பிரச்சினை குறித்து அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரை  சந்தித்து புகார் கொடுக்க உள்ளனர்.. இந்த மின்விளக்கு பிரச்சனை சரி செய்து சங்கியாண்டபுரம் காசியா பிள்ளை பகுதியில் வெளிச்சத்திற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

Post a Comment

0 Comments