திருச்சி மாநகராட்சி பகுதி பீமநகர் 52 வது வார்டு பகுதியில் பக்காளி தெரு உள்ளது...
இந்த பகுதி பீமநகர் பகுதி ஆழ்வார் தோப்பு பகுதியை இணைக்ககூடிய பகுதியாகும்.
இந்த பகுதியில் சாக்கடை நீர் கசிவு ஏற்பட்டு சாலை மற்றும் தெருக்களில் ஓடுகிறது... இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 52 வது வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி கருப்பையா அவர்களிடம் புகார் அளித்தும் இதுவரைக்கும் எந்த வித நடவடிக்கையும் இல்லை..
பக்காளி தெரு வழியில் 1,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் செல்கின்றனர்.. ஆகவே இந்த பகுதியில் நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.. திருச்சி மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை உள்ளது..
நிருபர் பீர்
0 Comments