இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் -திருச்சியில் இருந்து சென்னை தலைமைச் செயலகம் நோக்கி நடை பயணம் த.ம.ஜ.க அறிவிப்பு.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் வருகின்ற 15ஆம் தேதி மாலை 3 மணி அளவில் திருச்சி பாலக்கரை பகுதியில் இருந்து சென்னை தலைமை செயலகம் நோக்கி இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் பசிக்கக்கூடிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடை பயணம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் திரைவாசிகளின் விடுதலை குறித்து பேசிய அநேக நபர்கள் தற்போது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்ற கட்சிகளின் விடுதலை குறித்து வாய் திறக்காமல் இருப்பது வேதனைக்குரியது என்றும் எனது அவர்கள் தங்களுடைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையில் இந்திய நீதிமன்றங்கள் அனைத்தும் சிவில் மற்றும் இருமல் வழக்குகளை விசாரித்து முடிப்பதற்கு இன்னும் 350 வருடங்கள் ஆகும் என்றும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
எனவே தமிழக அரசு 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்று வரும் சிறை வாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்படும் நடைபயணத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு தமிழக முதல்வரிடம் மனு கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 Comments