BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நாளை சுதந்திர தின நிகழ்ச்சிகள் மற்றும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுவதாக அதன் மாநில தலைவர் பீமநகர் ரபீக் கூறினார் ...


மேலும் அவர் கூறும் போது 75 ஆவது சுதந்திர தின நிகழ்ச்சிகள் மற்றும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா நாளை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பீமநகர் ரபிக் தலைமையிலும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் முதல்வர் ரமீஜா அலிமா முன்னிலையில் நடைபெறுகிறது. 


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் வழக்கறிஞர் ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மேலும் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவரும் முன்னாள் வக்பு  வாரிய தலைவர்  ஹைதர் அலி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி முஸ்லிம்களின் தியாகமும் இன்றைய நிலைமை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். 


இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட தலைவர் சாதிக் ,மாவட்ட செயலாளர் சேக் மைதீன் ,மாவட்ட பொருளாளர் சாகின்,மாவட்ட துணைத் தலைவர் ரபீக், உசேன்,மற்றும் சதக்கத்துல்லா,மாநில பொதுச் செயலாளர் அப்பாஸ் மற்றும் பக்ருதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்... இந்நிகழ்ச்சியில் சிலம்ப ‌மாணவர்களின் கலை நிகழ்ச்சியும்  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.. என மாநில தலைவர் ரபீக் கூறினார்.

Post a Comment

0 Comments