NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** சதுரங்க போட்டி பரிசளிப்பு விழா

சதுரங்க போட்டி பரிசளிப்பு விழா

 SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதிக்குட்பட்ட 21வதுவார்டு தர்கா கிளை சார்பாக இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த சுரையா தியாப்ஜி, மற்றும் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற சதுரங்கப் போட்டி மற்றும் திறன் மேம்பாட்டு போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று SDPI கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் மர்ஹூம் சயீத் சாப் அவர்களின் அரங்கத்தில் தர்கா கிளை தலைவர் இஸ்மாயில் தலைமையில்  நடைபெற்றது.


இதில் மாவட்டத்தலைவர் முபாரக் அலி, மாவட்ட செயலாளர் மதர்_ஜமால்முகமது, மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் மஜீத்  மற்றும் கிழக்கு தொகுதி தலைவர் முஸ்தபா, தொகுதி துணைத்தலைவர் முகமதுவாசிக்  மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கிழக்கு தொகுதி துணைச்செயலாளர் அப்துல்அஜிஸ் தொகுத்து வழங்கினார்...


 இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இமாம் R.ஹஸ்ஸான் பைஜி, திமுக தர்கா பகுதியின் மாமன்ற உறுப்பினர் மும்தாஜ் பேகம், திமுக வட்டச் செயலாளர் முபாரக்  ஆகியோர் கலந்து கொண்டனர்.


வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும்  கேடயமும்,சான்றிதழ்களும் கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments