கோவை பேரூர் அடுத்த சுண்டபாளையம் அரசு உயர் நிலை பள்ளியில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு, பாலியல் குறி்த்த விழிப்புணர்வை ஏற்படுத்திய காவலர்கள்..
கோவை பேரூர் அடுத்த சுண்ட பாளையம் அரசு, உயர் நிலை பள்ளியில், பயலும் மாணவ மாணவிகளுக்கு, இன்று, வடவள்ளி காவல்நிலையத்தின் சார்பாக, பாலியல், குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, வடவள்ளி காவல்நிலைய உதவி ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வடவள்ளி காவல்நிலைய, முதல் நிலை காவலர், டி, பிரேமா மற்றும், எல், சரிதா, ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்...
குழந்தைகளை தவறான நோக்கத்தோடு தொட்டால் தடுக்கவும் அந்த இடத்தை விட்டு ஓடிவிடவும் மேலும் கூச்சலிட்டு அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும்.
குழந்தைகள் வெளியில் செல்லும் போது தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும் விளையாட செல்லும்போது எங்கு செல்லுகிறோம் என்பதை பெற்றோரிடம் சொல்லிட்டு தான் செல்ல வேண்டும் எக்காரணம் கொண்டும் பொய் சொல்ல கூடாது விளையாடும் போதோ வெளியில் இருக்கும் போதோ தினமும் நடப்பதை பெற்றோரிடம் மறைக்காமல் அப்படியே சொல்ல வேண்டும்
விளையாட்டின் போது உங்களது வயது ஏற்ப நண்பர்களுடன் விளையாடுவது நல்லது, உங்கள் வீட்டிற்குள் குடியிருக்கும் தாத்தா மாமா அண்ணன் ஆகியோர்கள் உங்களை அழைத்தால் உடனடியாக உங்களுடைய பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு தான் செல்ல வேண்டும், அங்கு சென்றால் அவர்கள் உங்களை எதற்காக கூப்பிட்டார்கள் என்று கேள்வி கேட்க வேண்டும். கடைக்கு போகச்சொன்னால் மறவாமல் உங்கள் பெற்றோரிடம் சென்று சொல்லி விட்டு தான் செல்ல வேண்டும் பள்ளிக்கு செல்லும்போது ஆட்டோ டிரைவர் வேன் டிரைவர அல்லது வழியில் யாராவது உங்களை தொடுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது மீறி தொட்டால் சத்தம் போட்டு அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும் என்பது குறித்த பல்வேறு விழிப்புணர்வுகளை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தனர் இந்த நிகழ்ச்சியில் சுண்டபாளையம், அரசு உயர் நிலை பள்ளி, தலைமை ஆசிரியர் ஹேமலதா, மற்றும் அறிவியல் ஆசிரியர் கருப்பசாமி, மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
###########
கோவை நிருபர்: கோபிநாத்
0 Comments