NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** கிருஷ்ண ஜெயந்தி விழா

கிருஷ்ண ஜெயந்தி விழா

 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேட்டு தெருவில் உள்ள பஜனை மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

மேட்டுத் தெருவில் உள்ள பஜனை மடத்தில் தஞ்சாவூர் ஓவியம் முறையில் வரையப்பட்ட  ஸ்ரீ ராமர் கிருஷ்ணர் படங்கள் உள்ளன அஷ்டமி நாளில் ரோகினி நட்சத்திரத்தில் ஆவணி மாதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நாள் 20.08.2022 அன்று முதல் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.




தொடர்ந்து பத்து நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா இந்த பஜனை மடத்தில் நடைபெறுகிறது ஒவ்வொரு நாளும் மேட்டு தெருவை சார்ந்த ஒவ்வொரு நபரும் விழாவிற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள் மாலை நேரத்தில் ஸ்ரீ ராமர் ஸ்ரீ கிருஷ்ணர் ஜெய வீர ஆஞ்சநேயர் ஜாம்பவான் ஆகிய படங்களுக்கு மலர் அலங்காரம் செய்து தீப ஆராதனை நடத்தி மிக சிறப்பாக வழிபடுகிறார்கள் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள் நிறைவு நாள் விழாவில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவின்  நாள் அன்று உறியடி திருவிழா நடைபெறும் அத்துடன் கிருஷ்ண ஜெயந்தி விழா நிறைவு பெறுகிறது.






2 -12 1911 ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் முடி சூட்டும் விழாவை நினைவுபடுத்தும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கு திருச்சிராப்பள்ளி ஆணையர் பணி நகராட்சி ஆணையராக பணிபுரிந்த அலுவலரின் கல்வெட்டு பஜனை மடத்தில் உள்ள சுற்றுசுவரில் பதிக்கப்பட்டுள்ளது


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments