110 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேட்டு தெருவில் உள்ள பஜனை மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
மேட்டுத் தெருவில் உள்ள பஜனை மடத்தில் தஞ்சாவூர் ஓவியம் முறையில் வரையப்பட்ட ஸ்ரீ ராமர் கிருஷ்ணர் படங்கள் உள்ளன அஷ்டமி நாளில் ரோகினி நட்சத்திரத்தில் ஆவணி மாதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நாள் 20.08.2022 அன்று முதல் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து பத்து நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா இந்த பஜனை மடத்தில் நடைபெறுகிறது ஒவ்வொரு நாளும் மேட்டு தெருவை சார்ந்த ஒவ்வொரு நபரும் விழாவிற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள் மாலை நேரத்தில் ஸ்ரீ ராமர் ஸ்ரீ கிருஷ்ணர் ஜெய வீர ஆஞ்சநேயர் ஜாம்பவான் ஆகிய படங்களுக்கு மலர் அலங்காரம் செய்து தீப ஆராதனை நடத்தி மிக சிறப்பாக வழிபடுகிறார்கள் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள் நிறைவு நாள் விழாவில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவின் நாள் அன்று உறியடி திருவிழா நடைபெறும் அத்துடன் கிருஷ்ண ஜெயந்தி விழா நிறைவு பெறுகிறது.
0 Comments