கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய ஸ்டன்ட் மாஸ்டர் கனல்கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்,
திருச்சி மாவட்டம் தமிழ் புலிகள் கட்சி சார்பில் மத்திய மண்டல செயலாளர் ரமணா தலைமையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்,
அந்த மனுவில் திரைப்பட ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையை இடிக்க வேண்டும் என்று கூட்டத்தில் பேசி கலவரத்தை தூண்டு நோக்கில் உள்ளார் எனவே இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அமைதி பூங்காவான தமிழகத்தை பாதுகாக்க வேண்டும் என கூறி தோழமை கட்சியான அகில இந்திய ஏழை மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் எ ஜெ.ஜான்பாஷா, தமிழ் புலி கட்சி மாவட்ட துணை செயலாளர்.
கனேசன், டி.காபி டிபன், வர்த்தக சங்கத்தின் ரவுத்தர்ஷா, மற்றும் தோழமை கட்சியுடன் கலந்துகொண்டு மனு அளித்தனர்,
0 Comments