NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட செயற்குழு கூட்டம்

விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட செயற்குழு கூட்டம்

  விமன் இந்தியா மூவ்மென்டின்  மாவட்ட செயற்குழு கூட்டம் WIM திருச்சி மாவட்ட தலைவர் மூமினா பேகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக -𝐒𝐃𝐏𝐈 கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர்  முபாரக் அலி  அவர்கள் கலந்துகொண்டு WIMயின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்தும் , பெண்களுக்கு எதிராக நடக்கின்ற வன்கொடுமைகள்,  பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள்  தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்.


இக்கூட்டத்தில்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 தீர்மானம் 1  :

திருச்சி அரசு மருத்துவமனையில்  விபத்தில்  மரணமடையும்  பெண்களுக்கு  தனி பிணவரை  அமைக்கவேண்டும் பெண் மருத்துவரை கொண்டே  உடல் கூறு ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

 தீர்மானம் 2 :  அரசுப்பள்ளிகளில்  8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு  மனோதத்துவ நிபுணர்களை கொண்ட  ஆலோசனைகள் வழங்க வேண்டும்  இளம் வயதில் முறையான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை இன்றி பல்வேறு மாணவிகள்  தங்களது  திசையறியாது  விபரீத முடிவுகளை விடுகின்றார்கள்  இதைத் தடுக்கும் வண்ணம்  மனோதத்துவ நிபுணர்களை கொண்ட குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.


இந்நிகழ்வில் விமன் இந்தியா மூவ்மென்டின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் தௌலத் நிஷா,துணை தலைவர் ரபியா பானு,பொருளாளர் ஷமினா பர்வீன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாஜிதா பேகம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments