BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து நன்றி தெரிவித்த SDPI கட்சியினர்

திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து நன்றி தெரிவித்த SDPI கட்சியினர்

திருச்சி உறையூர் பகுதியில் பொதுமக்களுக்கு  இடையூறாகவும், மிகவும்  அச்சுறுத்தலாகவும், செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரி பல்வேறு கோரிக்கைகளை SDPI கட்சி, உட்பட பல்வேறு பொதுநல அமைப்புகள், சமூக நல அமைப்புகள்,தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் விளைவாக கடந்த  மூன்று கடைகளையும் தற்காலிகமாக மூட சொல்லி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் அவர்கள் உத்தரவிட்டதை  தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று எஸ்டிபிஐ  கட்சியின் மேற்கு தொகுதி தலைவர் தளபதி அப்பாஸ் அவர்களின் தலைமையில் SDPI நிர்வாகிகள் நேரில் சந்தித்து புத்தகம் வழங்கி நன்றி தெரிவித்து கொண்டோம்.


தற்காலிகமாக மூடப் பட்ட அந்த மூன்று மதுக்கடைகளும் நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்றுSDPI கட்சியின் சார்பாக அழுத்தமான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் துணைத் தலைவர் KSA.ரியாஸ்,துணை செயலாளர் சிராஜ்.,SDTU மாவட்ட பொருளாளர் சக்கரை மீரான்,11வார்டு கீரைக்கொல்லை கிளை தலைவர் ஜாகீர் உசேன், துணைத் தலைவர் பிலால்,செயலாளர் ஜெய்லாபுதீன், பொருளாளர் அக்பர் அலி, ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கையும் நன்றியையும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments