திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் விவேகானந்தர் குறித்த சிறப்புக் கருத்தரங்க விழா நடைபெற்றது. கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட 4 அலகுகள் சார்பாக இவ்விழா நடைபெற்றது...தஞ்சாவூர் ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தா அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ மாணவிகளிடம் விவேகானந்தர் குறித்த தத்துவங்களை எளிமையான முறையில் எடுத்துரைத்தார்...
சிகாகோ நகரில் இந்தியாவின் பண்பாட்டைப் பறைசாற்றும் விதமாகச் சொற்பொழிவு நிகழ்த்திய தன்மையையும் , உலக அளவில் இந்தியர்களுக்கு இருக்கக்கூடிய பெருமையை எடுத்துரைத்ததையும் மாணவர்களிடையே தெளிவாக எடுத்துரைத்தார் ...
விவேகானந்தர் குறித்து மாணவ மாணவிகள் எழுப்பிய பல்வேறு வினாக்களுக்கும் சுவாமி விமூர்த்தானந்தா அவர்கள் மிகத் தெளிவாகப் பதில் வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜி அவர்கள் விழாவினை ஒருங்கிணைத்து நடத்தினார் . நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் அனைவரும் திரளாக பங்கேற்றனர்.
நிருபர் ரூபன்
0 Comments