// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாலை மறியல்

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாலை மறியல்

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திடீர் சாலை மறியலால் பரபரப்பு.

தமிழகத்தில் சென்னை,கோவை, ஏர்வாடி,தேனி,கடலூர்,தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் மற்றும் மதரஸாக்களில் மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் அதன் தலைவர்களும் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 


இதனை கண்டித்து தமிழக முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திடீரென அவர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு மீறி பாலக்கரை சாலையில் மறியல் ஈடுபட்டனர். 



இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்ய செய்தனர்.இதன் காரணமாக பாலக்கரை பகுதியில் அரை மணி நேரத்திற்க்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Post a Comment

0 Comments